Thursday 9 November 2017


                                GOOD NEWS

78.2 ARREARS FOR EXTRA INCREAMENT CASES

=========================================

CIRCLE SECT COM C.K NARASIMMMAN AND DIST SEC KARAIKUDI COM V.SUBRAMANIAN DISCUSSED WITH JOINT CONTROLLER OF COMMUNICATIVE ACCOUNTS DOT CHENNAI  ABOUT THE EXTRA INCREAMENT CAESES.
 

MORE THAN 600 BSNL PENSIONERS IN TAMILNADU WHO GOT THE EXTRS INCREAMNET , ARE NOT ALLOWED TO DRAW 78.2 DA ARREARS BY DOT.

NOW DOT CHENNAI  AGREES TO DRAW 782 DA FOR THOSE WHO GOT EXTRA INCREAMENT AND THE WORK IS PROGRESS.
HENCE DISTRICT SERCTRIES ARE REQUESTED TO PERSUE TO SEND THE RESPECTIVE SERVICE BOOKS WITH PREVIOUS CALCUTION TO DOT CHENNAI  


V.SUBRAMANIAN DS. AIBDPA KARAIKUDI

Wednesday 3 May 2017

78.2சத பஞ்சப்படி  நிலுவைத்தொகையினை தாமதமின்றி வழங்கிட DOT / வங்கிகளுக்கு கடிதம்.

          நீண்ட போராட்டங்கள் மூலம் 78.2சத பஞ்சப்படி உத்தரவு வெளியாகி அதற்கான நிலுவைத்தொகை வழங்கிட வங்கிகள் / அஞ்சலகங்களுக்கு அதற்கான உத்தரவுகள் சென்றாலும் சில வங்கிகள் அதனை வழங்குவதில் காலதாமதங்கள் செய்கின்றன. எனவே காலதாமதம் தவிர்த்து உரிய கால அவகாசத்தில் வங்கிகள்  நிலுவைத்தொகையினை வழங்கிடக்கோரி ஓய்வூதியம் வழங்கிடும் வங்கி பிரிவுகளுக்கு நமது AIBDPA மாநிலச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

               மேலும் அதன்  மீது உரியகவனம் செலுத்தி வங்கிகள் காலதாமதமின்றி நிலுவைத்தொகை வழங்கிட ஏற்பாடு செய்யக்கோரி நமது  மாநிலச் செயலர் சென்னை   DOT அலுவலகத்தில் உள்ள Jt.CCAவை பார்த்து கடிதம் கொடுத்தார். 

    Jt.CCAவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

  AIBDPA Letter to IOB

Friday 21 April 2017

    OUR CIRCLE SECRETARY 
COM C.K.NARASIMHAN ,KARAIKUDI DIST SEC V.SUBRAMANIAN AND CHENNAI DIST.SEC COM. KODANDAM MET DOT CELL DEPUTY CONTROLLER OF COMMUNICATION IN CHENNAI, ERHIRAJ SALAI AND DISCUSSED WITH FIXATION OF 78.2 IN VARIOUS COMRADES IN ALL SSAS.
IT IS TOLD THAT 75% CASES CLEARED. AND REMAINING  CASES WILL BE CLEARED WITHIN JUNE2017. 
CALL ATTENTION DAY 20.4.2017 IN CGM OFFICE CHENNAI. DISTRICT SEC V.SUBRAMANIAN PARTICIPATED.

Thursday 20 April 2017

தமிழக கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டங்கள்.

          சென்னை மாவட்டச்சங்கம் சார்பில் சென்னை மாநில அலுவலகம் முன்பு தோழர். ஆரோக்கியராஜ் தலைமையில் இன்று 20.04.2017 காலை 1100மணி அளவில் “கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்புரை ஆற்றினார்.

AIBDPA மாநிலச் செயலர் C.K. நரசிம்மன் மைசூரு மத்திய செயற்குழு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். சரவணன், மாநிலமைப்புச் செயலர் தோழர். C. சின்னையன், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராமன் நன்றி கூறினார்.

மைசூரு மத்தியச்செயற்குழு முடிவை அமுல்படுத்த மாநிலச்சங்கம் வேண்டுகோள்.

1. 01-01-2017 முதல் பென்ஷன் மாற்றம் வழங்கப்பட வேண்டும் !

2. 01-01-2017 முதல் 50சத பஞ்சப்படியை ஓய்வூதியத்தோடு இணைக்க வேண்டும்.

3. மருத்துவப்படியினை உடனடியாக வழங்க வேண்டும்.

4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1ஐ அனுமதிக்க வேண்டும்.

5. நிலுவையில் உள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்கவேண்டும்.

6. தொலைத்தொடர்பு ஊழியர் குடியிருப்புகளில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும்.

7. 01-01-2007 முதல் 78.2சத பஞ்சப்படி இணைப்பில் நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும்.

8. மருத்துவப்பில்களை வழங்குவதில் உள்ள தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.

9. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

10. BSNL & DOT ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச தொலைபேசி அழைப்பு வசதிகளை நீடிப்பு செய்ய வேண்டும்.

11. DOT ஓய்வூதியர்களுக்கு CGHS மருத்துவ வசதிகளை மீண்டும் வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க 3 கட்ட போராட்டங்களை மைசூரு மத்திய செயற்குழு அறிவித்தது. அதன்படி முதற்கட்ட போராட்டமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

    இரண்டாவது கட்ட போராட்டமாக அனைத்து மட்டங்களிலும் 2017 ஏப்ரல் 20ம் தேதி “கவன ஈர்ப்புதினம்”நடத்திடவும் ஆர்ப்பாட்டங்களை நடத்திடவும் அறைகூவல் விட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மட்டங்களிலும் “கவன ஈர்ப்புதினம்”  சக்திமிக்கதாக நடத்திட மாவட்டச் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகிறது.


Tuesday 11 April 2017

HAPPY NEWS FOR PENSIONERS

OUTDOOR MEDICAL ALLOVANCE WITHOUT VOUCHER IS RESTORED.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்கிட உத்தரவு வெளியாகி உள்ளது.

       நமது தொடர் முயற்சியாலும் வலுவான போராட்டங்களாலும் BSNL நிர்வாகம் ஓய்வூதியர்களுக்கு முன்புபோல் காலாண்டுக்கு ஒரு முறை மருத்துவப்படி வழங்கிட உத்தரவு வெளியிட்டுள்ளது.

 உத்தரவு எண் : BSNL / Admn.1 / 15-22 / 14 dated 11-04-2017.

             2012 முதல் நிறுத்தப்பட்ட மருத்துவப்படி தொடர் முயற்சியால் மீண்டும் வழங்கிட BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை வழங்கிடவும் பரிசார்த்தமாக 6 மாதங்கள் வழங்கிடவும் உத்தரவு வெளியாகி உள்ளது. உத்தரவு வெளியிட்ட BSNL நிர்வாகத்திற்கும் மருத்துவப்படி கிடைத்திட தொடர்ந்து போராடிய  AIBDPA தலைவர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் BSNLEU சங்கத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.